இல்லாமல் இல்லை
சிற்பி செதுக்காத பொற்சிலை
கவிஞன் பாடாத கவிதை
மேகம் பொழியாத சாரல்
காற்றில் பிறக்காத தென்றல்
என்றும் வாடாத வாசமுல்லை
விளக்கில் பிறக்காத வெளிச்சம்
தேனில் நனையாத இன்சுவை
மண்ணில் விளையாத மாங்கனி
சந்திரனால் தோன்றாத குளிர்ச்சி
வீணையின்றி பிறந்த ராககானம்
பிரம்மன் படைக்காத பேரழகுப்பெட்டகம்
அனைவர் மனம், மொழி, உடலை
ஆட்டிவைக்கும் படைபிலக்கணம்
இத்தனை அடைமொழி ஆபரணங்களும்
அதன் சொந்தக்காரர்களுக்கு மட்டும் புரிந்த ஒன்று .
அதனை அறிந்தவரும், தெரிந்தவரும் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று!
அத்தனையும் மொத்தமாக உத்தமப் பெண்ணுக்குப்பொருந்தும் என்றாலும்
இதற்கும் பொருந்தும் - அது
வாய்மையின் தூய்மை வெளிப்பாடு! புறப்பாடு